மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை: கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழு!

Date:

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற சந்திப்பின் போத இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலிப் வெதஆராச்சி, நிமல் லான்சா, நிரோஷன் பெரேரா, பியால் நிஷாந்த, சனத் நிஷாந்த, மயந்த திஸாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இந்தக் குழுவின் அங்கத்துவத்திற்கு திறைசேரியின் பிரதிநிதி ஒருவர் பரிந்துரைக்கப்படுவார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமிக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...