முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியலுக்கு வருகிறார்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் களனி அமைப்பாளரான மேர்வின் சில்வா மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு திரும்பியுள்ளார்.

அவர் இன்று வெள்ளிக்கிழமை (01) கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

2013 இல் அவர் களனி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததுடன் 2015 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அவர் பல சு.க எம்.பி.க்களுடன் சேர்ந்து ஜனாதிபதி சிறிசேனவிடம் இணைந்து செயறப்பட்டார்.

அதன்பின்னர், மேர்வின் சில்வா 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து ராஜபக்சக்களை வெளிப்படையாக விமர்சிப்பவராக இருந்து வருகிறார்.

ஊடகங்களுடனான தனது உறவுக்கு பெயர்போன மேர்வின் சில்வா, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் குழுவொன்றை வழிநடத்திச் சென்றார். அதன் பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரி அதன் ஊழியர்களால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது மற்றும் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக கருதப்படுகிறது.

இதையடுத்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்து, வேறு அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டார். சிறிது காலம் அரசியலில் இல்லாத நேரத்திலும், தொடர்ந்து தொலைக்காட்சி நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும்; தோன்றினார்.

அதிக மதம் சார்ந்த நபராகக் கருதப்படும் அவர், மதத் தொண்டு நிறுவனங்களுக்கு அவர் அளித்த நன்கொடைகள் மற்றும் அவரது ஆடம்பரமான பூஜைகளும் இலங்கை அரசியல்வாதிக்கு தனித்துவமான வர்த்தக முத்திரையாகும்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...