ரணில்- சஜித் கடும் வாக்குவாதம்: ‘எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறத் தவறிவிட்டது’

Date:

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாசவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஆரம்பமானதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் பிரதமரும் அவரது அரசாங்கமும் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறும்போது எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறத் தவறிவிட்டதாக பிரதமர் கூறினார்.

பொருளாதாரம் நெருக்கடி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தி சபையில் பிரதமர் ரணில் உரையாற்றினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் வேலைத்திட்டங்களை செய்ய முடியாத பிரதமரே உள்ளதார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாற்று அரசாங்கமான எதிர்க்கட்சிக்கு ஆட்சியை ஒப்படைக்குமாறு கோருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினரிடம் முறையான செயற்றிட்டங்கள் இல்லை. அப்படியிலுந்தால் அதனை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சஜித் பிரமேதாச,  ரணில் விக்கிரமசிங்கவிடம் நாங்கள் படிக்கவில்லை எனது தந்தையே அவருக்கு அரசியல் கற்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் ஜப்பானிய நிறுவனத்திடம் ‘Taisei.’ என்ற பெயரில் கமிஷன் கோரியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிந்து கொண்டதாகவும், இது தொடர்பில் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...