12 காரணிகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டன!

Date:

12 காரணிகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கைக்குப் புறம்பாக பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்பட்டதாக NTC அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களின் விலை 10.24% அதிகரிப்பு என்பன உட்பட கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் 35% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான மிலன் மிராண்டா தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 10.24% குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் பஸ் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அனைத்து பஸ்களிலும் புதிய பஸ் கட்டணத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பான முறைகேடுகளை நடமாடும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் வழிகாட்டல்களை மீறும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...