16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா!

Date:

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று 16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அண்மையில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் ஜூன் 24 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதன்படி 16 நாட்கள் அந்த அமைச்சர் பதவியில் பணியாற்றினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...