2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதல் பதக்கத்தை வென்றது!

Date:

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

55 எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இசுரு குமார இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.

இதில் மலேசியா தங்கப் பதக்கமும், இந்தியா வெள்ளிப் பதக்கமும் வென்றன.

இதேவேளை, 49 கிலோகிராம் பெண்களுக்கான எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீமாலி சமரகோன், இன்று 8வது இடத்தை பிடித்தார்.

ஸ்ரீமாலி ஸ்னாட்ச் சுற்றில் 65 கிலோ எடையுடன் மொத்தம் 152 கிலோ எடையை அதிகபட்சமாக வெளிப்படுத்தினார்.

இலங்கை பூப்பந்து அணி நேற்றைய பூப்பந்து கலப்பு குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து, ஜூலை 30 அன்று இந்திய அணியிடம் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

ஆண்களுக்கான ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் மூன்றாவது போட்டியில் விளையாடிய இலங்கை ரக்பி அணி, இன்று சமோவாவிடம் 44-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் பெண்கள் அணியை 74-0 என்ற கணக்கில் கனடா தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...