2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதல் பதக்கத்தை வென்றது!

Date:

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

55 எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இசுரு குமார இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.

இதில் மலேசியா தங்கப் பதக்கமும், இந்தியா வெள்ளிப் பதக்கமும் வென்றன.

இதேவேளை, 49 கிலோகிராம் பெண்களுக்கான எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீமாலி சமரகோன், இன்று 8வது இடத்தை பிடித்தார்.

ஸ்ரீமாலி ஸ்னாட்ச் சுற்றில் 65 கிலோ எடையுடன் மொத்தம் 152 கிலோ எடையை அதிகபட்சமாக வெளிப்படுத்தினார்.

இலங்கை பூப்பந்து அணி நேற்றைய பூப்பந்து கலப்பு குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து, ஜூலை 30 அன்று இந்திய அணியிடம் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

ஆண்களுக்கான ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் மூன்றாவது போட்டியில் விளையாடிய இலங்கை ரக்பி அணி, இன்று சமோவாவிடம் 44-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் பெண்கள் அணியை 74-0 என்ற கணக்கில் கனடா தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...