ஆறு சமூக செயற்பாட்டாளர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஆறு செய்றபாட்டாளர்களும் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர ஆகியோரின் பெயர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.
ஜூன் 9ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த 6 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.