6 சமூக செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாடு செல்ல தடை!

Date:

ஆறு சமூக செயற்பாட்டாளர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆறு செய்றபாட்டாளர்களும் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர ஆகியோரின் பெயர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.

ஜூன் 9ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த 6 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...