அனைத்து முச்சக்கரவண்டிகளும் பொலிஸ் நிலையத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்: எரிசக்தி அமைச்சு!

Date:

எரிபொருள் விநியோகிக்கும் புதிய நடைமுறையின் கீழ், இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் அனைத்து முச்சக்கரவண்டிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், தமக்கு அதிகாரத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தமது முச்சக்கரவண்டிகளை பதிவு செய்துக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் உரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், வருமான வரி பத்திரத்தின் இலக்கத்திற்கு அமைய, எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறையொன்று எதிர்வரும் வெள்ளிகிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறுகின்றார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...