அலரிமாளிகையில் இரு குழுக்களிடையே மோதல்: 10 போராட்டக்காரர்கள் காயம்

Date:

கொழும்பு அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து 10 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து காயமடைந்த இரு போராட்டக்காரர்கள் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற பொது மக்கள் எழுச்சியின் போது அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை ஆக்கிரமித்துள்ளனர்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...