இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து!

Date:

‘மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவில் தலைமைப் பொறுப்பிற்கு நீங்கள் நியமிக்கப்பட்டது, உங்கள் திறமை மற்றும் அரசியல் சாமர்த்தியத்தின் மீது அரசும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்’ என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார்

இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார்.

அவரது பதவியேற்புக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் நட்புறவுகளை எடுத்துரைத்தார்.

இந்தியாவும், இலங்கையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இருந்து மக்கள் தொடர்பு கொண்ட அன்பான மற்றும் நீண்டகால உறவுகளை அனுபவித்து வருகின்றன.

மேலும் பல துறைகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் குறித்த கடிதத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...