‘கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இதுவரை பயண இலக்கை அடையாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த இராஜினாமா கடிதம் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்ற பிறகு அவர்  பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்பிப்பார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...