ஊடகவியலாளர்களை தாக்கிய விசேட அதிரடிப்படையின் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

தனியார் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் எஸ்.எஸ்.பி அதிகாரி ரொமேஷ் லியனகே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தின் ஊடக அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை தெரிவிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு நிறுவன சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணியிடம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையின் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...