கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பில் பல்வேறு ஊடகங்களில் கடமையாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (11) மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்ததுடன் ” ஊடக சுதந்திரத்தை பறிக்காதே!”, “ஊடகத்தையும் உணர்வுகளையும் ஒடுக்க நினைக்காதே!”, ” ஜனநாயகத்தின் நான்காவது தூணை நசுக்க நினைக்காதே!” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.