எரிசக்தி அமைச்சர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை சந்தித்தார்!

Date:

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தொழிற்சங்க தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் சில்லறை விற்பனை செய்வதற்கும் எண்ணெய் நிறுவனங்களை அழைப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

அதேநேரம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பெற்றோல் சரக்குத் திட்டம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகத்தை நம்பி 1100க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கையிருப்பு பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...