எரிபொருள் நெருக்கடி: ‘முடிந்தவரை பல ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Date:

இன்று அனைத்து அலுவலக ரயில்களையும் இயக்க முடியாது என ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக, பணிக்கு சமூகமளிப்பதில் மிகவும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் இந்த நிலைக்கு முகம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

அதன்படி 48 அலுவலக ரயில்களில்  22 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால், இன்ஜின் மற்றும் ஃபுட்போர்டுகளில் ஏராளமான பயணிகள் பாதுகாப்பின்றி செல்வதை காண முடிந்தது.

இதேவேளை நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை நிலைய அதிபர்கள் இடைநிறுத்தியுள்ளனர். இன்றைய தினம் புகையிரதத்தை இயக்குவதாக நிர்வாகம் உறுதியளித்ததன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கசுன் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று, கிட்டத்தட்ட 140 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன, ரயில் நிலைய ஊழியர்கள் உடனடியாக வெளியேற முடிவு செய்தனர். ரயில் இயக்கப்படுகிறதா, இல்லையா என்பதை பயணிகளுக்கு தெரிவிக்க நிர்வாகம் தவறியதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதன் உறுப்பினர்கள் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒரு சில ரயில்களை மட்டும் இயக்கும் நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், வழமை போன்று புகையிரதங்களை இயக்குவதாக நிர்வாகம் உறுதியளித்ததன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கூடியளவு ரயில்கள் ஒழுங்குபடுத்தல்கள் இன்றி அல்லது இல்லாமலேயே இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் வேளையில் ஒழுங்குமுறை அதிகாரிகள் எரிபொருள் கேட்பது நியாயமற்றது எனவும் ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலை நேரத்தில் சுமார் 22 அலுவலக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...

பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு...

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத்...

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...