கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 ஆண்டுகள்!

Date:

இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன.

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட அதேவேளை 14 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு எம்1-17 , மூன்று கே-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...