‘கொவிட்’ அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்’: தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்!

Date:

‘கொவிட்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ‘கொவிட்’ தடுப்பூசியைப் பெறுவதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்பு ‘கொவிட்’ தடுப்பு ஊசி போடப்பட்ட பகுதிகள், வட்டார சுகாதார மருத்துவர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

இன்று (27) காலை முதல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள இராணுவத்தினரால் நடத்தப்படும் ‘கொவிட்’ தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான மக்கள் வருகைத் தந்தனர்.

இதேவேளை ‘கொவிட்’ அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

சில காலத்தின் பின்னர் பாடசாலைகள் திறக்கப்படுவதால், அதனைத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ‘கொவிட்’ பரிசோதனை செய்யப்படாது என்றும் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...