சமையல் எரிவாயு கொள்முதலுக்கு மின்கட்டணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கும் முறைமை!

Date:

உள்நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கு மின்சாரக் கட்டண பத்திரத்தை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறைமையொன்றை தற்போது தயாரித்து வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கறுப்பு சந்தை மாஃபியாவை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

அதன்படி, ஒருவர் எரிவாயுவைப் பெற விரும்பினால், எதிர்காலத்தில் அவரது வீட்டின் மின் கட்டணத்தை எரிவாயு விற்பனையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதன் மூலம் மின்கட்டணத்தை சமர்ப்பித்து, காஸ் வழங்கிய பின், காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டதாக பில்லில் முத்திரை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை கண்காணிக்க பொலிஸார் உதவியையும் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு வரவுள்ளது.

தற்போது அதன் விநியோகத்தை வரும் 7ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ள 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவின் முதல் பாகம் நாடு முழுவதும் வந்து சேரவுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...