‘ஜனாதிபதி இலங்கையிலேயே இருக்கிறார், வாய் தவறி கூறிவிட்டேன்’: சபாநாயகர்

Date:

நான் சர்வதேச ஊடகமான (பிபிசி) நேர்காணலில் தவறு செய்துவிட்டேன் என்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் தாம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக தான் பிபிசி உலகச்சேவைக்கு வாய் தவறி கூறிவிட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எங்கே இருக்கின்றார், என்று பிபிசி உலகசேவை கேள்வியெழுப்பியது,
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அவர் அண்டை நாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் 13 ஆம் திகதி நாடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.

அதன்பின் இந்திய ஊடகத்திற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருக்கிறார், வாய்தவறி கூறிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...