தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்!

Date:

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பரவலான கொவிட் நோய்த் தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது மக்களுக்கு அவசியமானது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்களில் பல தொற்றுகள் பதிவாகி வருகின்றன. கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மட்டுமே பெற்றவர்கள் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறினார்.

பூஸ்டர்களாக வழங்கக்கூடிய பைசர் தடுப்பூசிகள் அரசு சுகாதாரக் கிடங்குகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்சமயம் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியின் உரிய அளவைப் பெற்றுக் கொள்ளுமாறும் டாக்டர் கினிகே பொதுமக்களை வலியுறுத்தினார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...