தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்!

Date:

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பரவலான கொவிட் நோய்த் தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது மக்களுக்கு அவசியமானது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்களில் பல தொற்றுகள் பதிவாகி வருகின்றன. கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மட்டுமே பெற்றவர்கள் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறினார்.

பூஸ்டர்களாக வழங்கக்கூடிய பைசர் தடுப்பூசிகள் அரசு சுகாதாரக் கிடங்குகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்சமயம் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியின் உரிய அளவைப் பெற்றுக் கொள்ளுமாறும் டாக்டர் கினிகே பொதுமக்களை வலியுறுத்தினார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...