தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள்  ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் காலியான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர் ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சராக பதவியேற்றார். மற்றும் சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 10 ஆம்  திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...