தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள்  ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் காலியான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர் ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சராக பதவியேற்றார். மற்றும் சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 10 ஆம்  திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...