நீர் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை!

Date:

நீர் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் எதிர்காலத்தில் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வீட்டு நீர் பாவனையாளர்கள் இவ்வாறான நிலுவைகளை செலுத்தவில்லை என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாத அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கியுள்ள குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நுகர்வோரிடமிருந்து ரூ. 7.5 பில்லியன் நீர் வழங்கல் சபைக்கு செலுத்தப்படவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 50,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண பில்களை செலுத்தவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...