பல இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகித்த அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் காலமானார்!

Date:

சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் ஜோர்த்தானில் காலமானார்.

யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருடன் பா அலவி சாதாத் வழி முறையில் அல்மஷ்ஹூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

யெமன் நாட்டின் ஏடன் அல்லது அத்ன் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நீண்டகாலமாக வசித்து வந்தார்கள்
செய்ஹ் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் சமகால இஸ்லாமிய (பிக்ஹ்) கலைத்துறையில் அறிமுகம் செய்த முக்கிய திருப்பமாக ‘பிக்ஹ் அல் தஹாவுலாத்’ காணப்படுகிறது.

‘மறுமைநாள் பற்றிய சட்டங்கள்’ என்ற அம்சம் பிரதானமாகும் நவீன காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு (பித்னாக்களுக்கு) இஸ்லாமிய வரையறைக்குள் எவ்வாறு தீர்வு காண்பது என்ற விடயத்தை பல தசாப்தங்களாக ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.

பா அலவி சூபி மரபில் தவிர்க்க முடியாத ஒர் ஆளுமையாக அபூபக்ர் அல் மஷ்ஹூர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தோனேசியா மலேசியா யெமன் ஜோர்தான் உட்பட பல இடங்களில் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவியதோடு பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் அவர்கள் நிர்வகித்து வந்தார்கள்.

தனது சொந்த முயற்சியால் யெமனில் தனியான பல்கலைக்கழகம்  ஒன்றையும் செய்ஹ் அபூபக்ர் அல் மஷ்ஹூர் நிறுவியுள்ளார்கள்.

பேருவளை ஜாமிஆ நளீமியா சீனன் கோட்டை ஜாமிஆ அல் பாஸிய்யா காலி தலாப்பிட்டி மத்ரஸா அல் முஸ்தபவிய்யா உட்பட பல நிறுவனங்களுக்கு அவர்கள் பல தடவைகள் விஜயம் செய்து அங்கு விரிவுரைகளையும் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...