பாதுகாப்பை வலுப்படுத்த ஜனாதிபதி ரணில் மீது நம்பிக்கை உள்ளது: ரஷ்ய ஜனாதிபதி கடிதம்

Date:

‘பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் உங்களது செயற்பாடுகளில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்’ என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி வத்தேரி இன்று (25) காலை பிரதமர் செயலகத்திற்கு வருகை தந்து ரஷ்ய ஜனாதிபதியின் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை உள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அனைவரும் வெற்றி மற்றும் அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...