இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஹல்டன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் பரந்த கலந்துரையாடலை நடத்தினார்.
மேலும், பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவருக்கு அறிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா மனித உரிமைகளுக்கு இணங்க உரிய நடைமுறை உட்பட பல பகுதிகள் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.