போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்துமாறு மதகுருமார்கள் அமைதி போராட்டம்!

Date:

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களை விடுவிக்குமாறு கோரி மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இன்று (29) காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டப் பகுதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, சிவில் சமூகத்தின் நியாயமான போராட்டத்துடன் நாங்கள் இருக்கிறோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் ஷனுக்க கருணாரத்ன ஆகியோரும் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மதகுருமார்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினர்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...