‘மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை’: எரிசக்தி அமைச்சர் காஞ்சன

Date:

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார சபையின் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தை பிரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மின்சார சபை2014 முதல் புதிய பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் எதையும் தொடங்கவில்லை அல்லது இயக்கவில்லை.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே முன்னோக்கி செல்லும் வழி என்றாலும், இதுபோன்ற திட்டங்களை எளிதாக்கும் அணுகுமுறை பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வு தேவை என்பதை ஒப்புக்கொண்ட அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டத்துடன் இது தொடங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...