லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

Date:

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நியாயமற்ற இலாபம் குறித்து புகார்கள் வந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புகார்கள் இருப்பின், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறைக்கு 1345 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..

இதேவேளை தற்போதுள்ள எரிவாயு வரிசைகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என லிட்ரோ எரிவாயு சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எரிவாயு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் எரிவாயு வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....