ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஆறுவயது காத்தான்குடி சிறுமி: ஸப்னம் இமாரா!

Date:

காத்தான்குடி, மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 01 இல் கல்விகற்றுவரும்
மாணவி பாத்திமா ஸப்னம் இமாரா 30 வினாடிகளில் 47 வகையான பூச்சிகளின் பெயரை அசூர வேகத்தில் கூறி சாதனை புரிந்து ஆசிய புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இவர் வைத்தியர் ஹுஸ்னி (MBBS) மற்றும் சப்னம் சன்ஸிதாவின் புதல்வியும் ரபீக்(PHI), முஹம்மத் சனூன் ஆகியோரின் பேத்தியுமாகும்.

இச் சிறுமியின் திறமையை பாராட்டியும் ஆசிய சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்தமைக்காகவும் உலக World Book of Records London இனால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவதில் மிகப்பெரும் சாதனையாளராக தனது பெயரை ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவுசெய்து ஊருக்கும் உறவுகளுக்கும் பெருமை பெற்றுக்கொடுத்திருக்கும் இச் சிறுமி எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் பதிவு செய்ய வேண்டும் என NEWSNOW வாழ்த்துவதோடு அவருக்காக பிரார்த்தனையும் செய்கின்றது.

(எம்.பஹ்த் ஜுனைட்- ஊடகவியலாளர்)

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...