மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Date:

திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடும் பஸ்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்களை அடையாளம் காண நடமாடும் பரிசோதனை அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணங்களை அறவிடும் சில பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பயணிகளிடம் அறவிடும் மேலதிக பணத்தை மீள செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...