ஆளும் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றனர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர நடவடிக்கை எடுத்தனர்.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (ஆகஸ்ட் 31) முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பட்டி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயண கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார. குமாரசிறி மற்றும் 12 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 31) காலை ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...