இன்று முதல் தேசிய அடையாள இலக்கம் கொண்ட பிறப்புச் சான்றிதழ்

Date:

இலங்கையில் புதிதாக பிறந்த பிள்ளைகளுக்காக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் இன்று (1) முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளடக்கப்படும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இரு திணைக்களங்களும் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஆரம்பகட்ட முன்னோடித் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிறப்புச் சான்றிதழைப் பெற்ற அனைத்து குடிமக்களும் 15 வயதை அடைந்து, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு, பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த முறைமைய வசதியாக இருக்கும். பிறந்தது முதல் ஒரே இலக்கத்தில் தகவல்களைப் பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன் மக்களுக்கு இருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...