அடுத்த பதினைந்து நாட்களில் கொவிட் தொற்று தீவிரமாகலாம்: சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Date:

அடுத்த பதினைந்து நாட்களில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் சமூகம் கூடும் இடங்களில் நோய் அறிகுறிகளுடன் கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவதாகவும் உபுல் ரோஹன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லாததால் நோயாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் துரதிஷ்டவசமான மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...