எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்களுக்கு உதவித்தொகை?: எரிசக்தி அமைச்சர் விளக்கம்

Date:

கடந்த சில மாதங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவாக 250 முதல் 300 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர்  லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மூடப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 40 கோடி ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பெரிய குற்றம் என சபையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர், மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதாகவும் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது மேலும் நிர்வகிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், அந்த ஊழியர்களுக்கு 250 முதல் 300 கோடி வரை மேலதிக நேர கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை. கடந்த மாதம் தான் மூடப்பட்டது. ஏழு நாட்களும் எரிபொருள் வெளியிடப்பட்டது.

எனவே அந்த ஊழியர்களுக்கு ‘ஓவர் டைம் அலவன்ஸ்’ மேலதிக கொடுப்பனவு கொடுக்க வேண்டும். கொடுப்பனவுகள் ஓரளவு நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...