முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வேறு நாட்டுக்குச் செல்கிறார்?

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கும் எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷ அங்கு செல்லவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும், தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் ரசாதா தனதிரெக், இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனவும் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி எந்தவொரு பொது தோற்றமோ அல்லது கருத்துக்களையோ வெளியிடவில்லை என்பதுடன் சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்கு எந்தவித சலுகைகளும், விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இதேவேளை , முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 14 அன்று மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...