எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம்!

Date:

அடையாளம் காணப்பட்ட ஒரு துறைக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

QR முறைமை தொடர்பில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த 03 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது, ​​வாகன பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் எரிபொரள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து அல்லாத எரிபொருள் தேவைகள் மற்றும் சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், QR அமைப்பின் ஊடாக பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளைச் செய்வதற்கும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...