எரிபொருள் பிரச்சினை காரணமாக தனியார் பேருந்துகள் 50 வீதத்தால் குறைக்கப்படும்!

Date:

எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை  தனியார் பஸ்கள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக கொழும்பு பஸ்டன் மாவத்தையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை வழங்குமாறு மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருளை உரிய முறையில் வழங்கினால் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ்களை பிரச்சினையின்றி இயக்க முடியும் எனவும் அதன் தலைவர் சரத் விஜித குமார குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...