காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொவிட் உள்ளது!

Date:

இந்த நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 நோயாளிகளாக சுகாதாரத் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பரவி வரும் இந்நோயை தடுப்பதற்கு சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் இந்நோய் மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னைய நோய்த்தடுப்பு மருந்துகளினால் இந்நோய் பரவுவது ஓரளவு தடைபட்டிருந்த போதிலும், சமூகத்தில் மீண்டும் அதே அறிகுறிகளுடன் பலரை சந்திப்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றார்.

இந்நோய் மேலும் பரவினால் சமூகக் கூட்டங்கள் நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...