காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொவிட் உள்ளது!

Date:

இந்த நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 நோயாளிகளாக சுகாதாரத் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பரவி வரும் இந்நோயை தடுப்பதற்கு சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் இந்நோய் மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னைய நோய்த்தடுப்பு மருந்துகளினால் இந்நோய் பரவுவது ஓரளவு தடைபட்டிருந்த போதிலும், சமூகத்தில் மீண்டும் அதே அறிகுறிகளுடன் பலரை சந்திப்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றார்.

இந்நோய் மேலும் பரவினால் சமூகக் கூட்டங்கள் நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...