காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணின் வீசா ரத்து!

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கெய்லி ஃப்ரேசர் எனப்படும் குறித்த பெண் தான் தங்கியிருந்த காலத்தில் காலி முகத்திடல் போராட்டத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஊக்குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இலங்கையில் அவர் தங்கியிருந்த இடத்தை அணுகி  அவர் தங்கியிருப்பதற்கான காரணத்தை ‘சந்தேகத்துக்குரியது’ எனக் கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...