காலி புகையிரத நிலையத்திற்கு அபாயா ஆடை அணிந்து வந்த இளைஞன் பொலிஸாரால் கைது!

Date:

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா ஆடை மற்றும் பர்தா அணிந்து வந்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்து காலி பொலிஸாரிடம் இன்று (19) காலை ஒப்படைத்துள்ளனர்.

காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை புகையிரத நிலையத்திற்கு வந்த அவர் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கிச் சென்றதையடுத்து அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர்.

அங்கு முஸ்லிம் பெண் உடை அணிந்திருந்தாலும் அவர் ஆணாக இருப்பதை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்.

இதனையடுத்து, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் பொலிஸாரின் விசாரணையின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பெண் ஆடை அணிந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடை அவரது தாயாரின் ஆடை எனவும் தெரியவந்துள்ளதுடன், குறித்த சந்தேகநபரை காலி புகையிரத நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் நிலையத் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...