காலி முகத்திடல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சடலங்கள் தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்!

Date:

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சடலங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நபர்களின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விடயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்குவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகளிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், இதுபோன்ற உடல்கள் இருப்பது பொதுமக்களின் ஒரு பிரிவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை சட்டத்தரணிகள் சங்கம் அவதானித்துள்ளது.

இதேவேளை, சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை பேணப்படுவதை உறுதி செய்வதற்கும் இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்வதற்கும் இவ்விரு விடயங்களையும் அவசரமாக விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் வங்கம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...