குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

Date:

75 சதவீத மின்சாரக் கட்டண உயர்வால் குளிர்சாதன உணவுப் பொருட்களான தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறைந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கணித்துள்ளது.

கட்டண உயர்வினால் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொருட்களின் விலையை குறைத்ததை அடுத்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களை மீண்டும் உணவகங்களுக்கு ஈர்க்கும் வகையில் வழக்கமான தேநீர் கோப்பை ரூ.30 மற்றும் மதிய உணவுப் பொதிகள் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், குளிர்சாதனப் பொருட்களுக்கான விலைகள் மட்டுமின்றி கடைகளில் மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தி நிறுவனங்கள் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் விலையை நிர்ணயிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...