கோட்டாபயவின் விஜயம் குறித்து தாய்லாந்து பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!

Date:

தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.

கோட்டாபய  ராஜபக்ஷ தனக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாட்டைத் தேடுவார் என தாய்லாந்து பிரதமர்  பிரயுத் சான் ஓ சா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா இன்று (11) முடிவடைந்தது.

மேலும் தாய்லாந்தின் பிரதமர்  மனிதாபிமான அடிப்படையில்  கோட்டாபய  தாய்லாந்திற்கு வர அனுமதிக்கப்பட்டார் என்றும், வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் கோரி தாய்லாந்தில் எந்த அரசியல் பணிகளையும் செய்ய மாட்டேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.

கோட்டாபய  ராஜபக்சவிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருப்பதால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்  டொன் பிரமுத்வினை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...