சர்வக்கட்சி அரசுக்கு சஜித் அஞ்சுவது ஏன்? அமைச்சர் மஹிந்த அமரவீர!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  தக்கவைத்துக் கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.  இது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவகாரத்திலும் அரசியலே நடத்துகின்றார். தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கவே, சர்வக்கட்சி அரசாங்கத்தை எதிர்க்கின்றார். சஜித்துக்கு நாடு பற்றி கவலை இல்லை.” எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...