சர்வக்கட்சி அரசுக்கு சஜித் அஞ்சுவது ஏன்? அமைச்சர் மஹிந்த அமரவீர!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  தக்கவைத்துக் கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.  இது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவகாரத்திலும் அரசியலே நடத்துகின்றார். தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கவே, சர்வக்கட்சி அரசாங்கத்தை எதிர்க்கின்றார். சஜித்துக்கு நாடு பற்றி கவலை இல்லை.” எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...