சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சு வெற்றி: வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ரணில் உரை

Date:

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று ​​பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்காலத்தில் குறித்த தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடன் உதவிகளை வழங்கும் முக்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை நம்புவதாக அவர் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...