சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சு வெற்றி: வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ரணில் உரை

Date:

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று ​​பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்காலத்தில் குறித்த தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடன் உதவிகளை வழங்கும் முக்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை நம்புவதாக அவர் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...