சவூதி பட்டத்து இளவரசர் இலங்கை ஜனாதிபதியிடமிருந்து எழுத்துமூல செய்தியைப் பெற்றார்!

Date:

சவூதி அரேபியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) எழுத்துமூல செய்தியைப் பெற்றதாக அஷ்ஷர்க் சவூதி செய்தி வெளியிட்டுள்ளார்.

இரு நாட்டு நட்பு நாடுகளையும் மக்களையும் இணைக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர், இலங்கை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவின் சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்களது சந்திப்பில் பேசப்பட்டது.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...