ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் எரான் விக்ரமரத்னவின் உரை!

Date:

பொருளாதார அரசியல் காரணங்களுக்கு அப்பால் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தின் அவசியத்தையும்  எரான் விக்ரமரத்ன வலியுறுத்தினார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் 197 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையின் வருடாந்த மாநாடு (அல் மஜ்லிஸ்) ஆகஸ்ட் 27-ஆம் திகதி கொழும்பு தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள அதன் தலைமையகக் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வமர்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் நாடு எதிர் நோக்கியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களையும் அவற்றை மட்டுப்படுத்தும் வழிவகைகளையும் விளக்கினார்.

இதேவேளை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி பிரதம அதிதிக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இம்மாநாட்டின் போது அடுத்த இரண்டாண்டுகளுக்கான இரண்டு உதவித்தலைவர்களும் மத்திய ஆலோசனை சபைக்கான (ஷூரா) 16 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...