ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் எரான் விக்ரமரத்னவின் உரை!

Date:

பொருளாதார அரசியல் காரணங்களுக்கு அப்பால் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தின் அவசியத்தையும்  எரான் விக்ரமரத்ன வலியுறுத்தினார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் 197 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையின் வருடாந்த மாநாடு (அல் மஜ்லிஸ்) ஆகஸ்ட் 27-ஆம் திகதி கொழும்பு தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள அதன் தலைமையகக் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வமர்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் நாடு எதிர் நோக்கியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களையும் அவற்றை மட்டுப்படுத்தும் வழிவகைகளையும் விளக்கினார்.

இதேவேளை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி பிரதம அதிதிக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இம்மாநாட்டின் போது அடுத்த இரண்டாண்டுகளுக்கான இரண்டு உதவித்தலைவர்களும் மத்திய ஆலோசனை சபைக்கான (ஷூரா) 16 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...