ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு பிணை!

Date:

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்  பிணை வழங்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பதினொரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட உயர் குற்றச்சாட்டுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கடந்த 9ஆம் திகதி (09) கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பிரதிவாதிகளையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்களது வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்தும் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...